Monday, May 18, 2009

வாழ்க தமிழினம்

இதை எழுதும் போது மிகுந்த மன வேதனையோடு கண்ணில் கண்ணீருடன் .இன்று சிங்கள தேசம் கொண்டாடுகிறது .சில தமிழ் பத்திரிக்கைகள் கொண்டாடுகிறது .சில தமிழ் தலைவர்களுக்கு கொண்டாட்டம்.சிலருக்கு திண்டாட்டம் .இனி yethai வைத்து அரசியல் நடத்துவது என்று.இருபத்துஐந்து வருட போராட்டம் இரண்டு லட்சம் தமிழ் மக்களின் தியாகம் எல்லாம் முடிந்தது . தமிழன் என்ற இனம் உலகத்தில் உண்டு என்று உலகுக்கு சொன்னவர்கள் .எத்தனை தடை இருந்த போதிலும் வான் படை கண்ட உன்னத தமிழர்கள் . அகதிகளாய்சென்றாலும் சென்ற இடங்களில் எல்லாம் செல்வம் சேர்த்தவர்கள் (தமிழ் நாட்டுக்கு வந்தவர்களை தவிர ).உலகம் தமிழ் அகதிகளாய் தன்னோடு அரவணைத்து கொண்டது .தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் மட்டும் mukaamkali அடைதது வைத்தனர் . இதில் சிங்களவனுக்கு தமிழன் வழிகாட்டி .இந்த நிலைமைக்கு யார் காரணம் .நிச்சயம் சிங்களவனோ இல்லை சோனியா காந்தியோ இல்லை.நாம் தான் .உலகத்தில் தன் இனம் அழிக்கப் படும் போது வேடிக்கை பார்த்த இனம் தமிழ் இனம் மட்டும் தான்.ரோம் எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம் . அவனுக்கு அடுத்து நமது தமிழர் தலைவர் கருனநிதி . அப்புறம் நாம் தமிழர்கள் .ஒருநாள் நமது வரும்கால சந்ததியினர் கதை சொல்வார்கள் ." முன்னொரு காலத்தில் தமிழினம் என்று தமிழ்நாட்டில் இருந்தது .சிறிலங்காவிலும் இருந்தது .அப்புறம் அவர்களே சண்டை போட்டு தங்களை தாங்களே கொன்று கொண்டார்கள் ."இதையும் வேறு எதாவது மொழியில் தாஅன் சொல்வார்கள் .எனென்றால் அப்போது தமிழ் இருக்காது .தமிழ் இனம் இருக்காது.நாம் எல்லோரும் ஆங்கிலம் படித்து ஆங்கிலேயர் ஆகி விடுவோம். இந்தி படித்து இந்தியன் ஆகியிருப்போம் .ஈழத்தில் தமிழினம் அழிந்து poi இருக்கும்.என்ன செய்வது .நாம் ஜன நாயக நாட்டில் வாழ்கிறோம் .மக்கள் யாரும் ஒட்டு போடமலேயே அதிகமான வோட்டு வித்யாசத்தில் செயிக்கலாம் .இந்த நாட்டில் பிறந்ததிர்காகவும் தமிழனாய் இருப்பதர்ககாவும் வெட்கப் படுவோதொடு வேதனை படுவதோடு நாம் என்ன செய்ய முடியும் .வழக்கம் போல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் கப் வாங்குமா என்று பார்க்க வேண்டியதுதான் .ஈமெயில் chattil கடலை போட போட வேண்டியதுதான் .அப்புறம் நான் இந்து ,நீ கிறிஸ்ட் என்று சண்டை போட வேண்டியது தான் .இதை நான் சொல்வதார்காக யாரும் இந்த குரூப் விட்டு பொய் விடுவேன் என்று மிரட்டலாம .அட போங்கப்பா . மனசு ரொம்ப வலிக்குது .எனேன்றல் மனிதர்களை விட நமக்கு மதம்தான் முக்கியம் என்னையும் சேர்த்துதான் .வாழ்க தமிழனம் வாழ்க அவர்களது சுயநலமும் துரோகமும் .விஜயசங்கர்

No comments: