Tuesday, August 12, 2008

அம்மா

வேலை தேடி பஸ் ஏறிய பொழுது
சீக்கிரம் வேலை தேடு
அப்பதான் நம் கடனை அடைக்க முடியும்-அப்பா

சீக்கிரம் வேலை தேடு அப்பதான்
என் கல்யாணம் நடக்கும் -தங்கை

சீக்கிரம் வேலை தேடு -எங்களுக்கும்
எதாவது வேலை இருந்தா சொல்லு -நண்பர்கள்

சீக்கிரம் வேலை தேடு அப்பதான் நம்
கல்யாணம் நடக்கும் -காதலி

பார்த்து போ வேளா வேளைக்கு சாப்பிடு
சனி கிழமை ஆனா என்னை தேய்த்து குளி-அம்மா
இன்று அம்மா சாப்பிடவும் சனிக்கிழமை என்னை தேய்க்கவும்
மறந்து போனது .ஆனால்
அம்மா சொன்ன வார்த்தைகள் மட்டும்
மறக்காமல் இன்னும் நெஞ்சுக்குள் ஈரமாய்
அம்மா என்ன செய்து உன் கடனை அடைப்பேன்.


























எப்படி கொடுப்பேன்

என் காதலி ,

நீ கொடுத்த பரிசுகளை கேட்டாய்
கொடுத்து விட்டேன்
நீ கொடுத்த கடிதங்களை கேட்டாய்
கொடுத்து விட்டேன்
உன் நினைவாய் என்னிடம் இருந்த
உன் படங்களை கேட்டாய்
கொடுத்து விட்டேன்
ஆனால்
நீ என்னை கட்டியணைத்த போது
உண்டான வெப்பத்தை எப்படியடி
திருப்பி கொடுப்பேன்
ஒவ்வொரு முறையும் உன் காலடி
ஓசை கேட்டு கனத்து போன
இதயத்தின் உணர்வுகளை எப்படி கொடுப்பேன்