Thursday, October 25, 2012

மழையும் என் தோழர்களும் தோழிகளும்

தனிமை வெயிலில் வறண்டு போன 
பாலை வனமாய் வாழ்கை 

ஒவ்வொரு மழைத்துளி வரவைப் பார்த்து 
வானம் பார்த்து   காத்திருக்கும் பூமியாய் மனசு 

ஒவ்வொரு முறை  குளிர் காற்று 
கடக்கும் போதும் மழையை  எதிர்நோக்கும் 
ஈரம் பட்ட மனது 

சில நேரங்களில் சிறு மழை பெய்தாலும் 
பற்றுதல் இல்லாமலோ இல்லை பற்றி 
கொள்ள முடியலோ  கடந்து சென்றது 
மழை நீர் ...

வெப்பத்தில் ஆவியாகி காணாமல் போகாமல் 
அவ்வப்போது சிறு   அன்பு  மழையில் 
நனைத்து குளிர்விக்கும்  தோழிகள் 


மேகம் மழை மூலம் பூமியை குளிர்வித்தாலும் 
பூமியோடு எப்போதும் சொந்தம் கொண்டாட 
முடிந்ததில்லை .

அன்பு கொண்ட நெஞ்சங்களும் அப்படியே ..

மேகம் மேலே இருக்கும் வரைதான் 
பூமிக்கு மழை கொடுக்க முடியும் ..

மழை நீர்  பெற்ற  பூமி  மலர்களை 
வான் நோக்கி வளர்த்து நன்றி சொல்கிறது 

மரங்களின் மூலம்  தன் கை அசைத்து 
அன்பை சொல்கிறதே 

அது போலவே நானும் ...

எப்போதும் என்  தோழர்களுக்கும் தோழிகளுக்கும் ..
நன்றியுடையவனாய் .................








 

Saturday, July 14, 2012

இன்னொரு காதல் கவிதை

உன் விழி ஈர பார்வையில்
நனைந்து போனது என் இதயம் ...

மழைக்கால மேகங்களாய்  எப்பொழுதும்
என்னுள் அலையும் உன் நினைவுகள் ...

நீ என்னை கடந்து போன
ஒவ்வொரு நொடியும்
நன் என்னை மறந்து போன 
தருணங்கள் ..

உனக்காக  காத்திருந்த தருணங்களில்
தவம் புரியாமலே நானும் முனிவநானேன்
யுகங்கள் கடந்ததால்

தீப்பெட்டி இல்லை தீக்குச்சி  இல்லை
உரசிக் கொண்டன உன் உதடுகள்
தீ பிடித்தது என் இதயம் ...






Tuesday, May 8, 2012

இன்று  காலை  ஒரு அழகான  படலை  கேட்கும்  வாய்ப்பு  கிடைத்தது .

கேட்கும் போதும் வரிகளை படிக்கும் போதும் இதமாக  இருந்தது 

இதோ  அந்த வரிகள் ..


உன்னை சரணடைந்தேன் மன்னவா மன்னவா
இன்னும் ஒரு தேவை சொல்லவா சொல்லவா
இந்த அழகிய நிமிசம் இது வளர்ந்திட வேண்டும்
இது முடிகிர நேரம் உயிர் விட வேண்டும்
உடலும் மனமும் உனையே தொடர............வா

காற்று வெளி மின்மினியாய்
கண்கள் வளி நீ வந்தாய்
நானேழுதும் மேஜையிலே
எரியும் விளக்கய் ஒளிருகிராய்
எனது விரல் நீ பிடித்து
உயிரெழுத்தை எழுதுகிராய்
துணையெழுத்து நீயாக
உரவின் உலகை உயர்த்துகிராய்..
உன் வெள்ளை மனம் பொன் மஞ்ஜ்சள் நிறம்
நான் என்னை மறந்தேன்
நான் செய்த தவம் நீ
பெற்ற வரம் நான் உன்னை அடைந்தேன்
அந்த சங்கித சந்திப்பில் சந்தோச தித்திப்பில்
மழை துளியென மடியினில் விழுந்தேன்...
(உன்னை )

சேர்த்து வெளி வான்மதியாய்
நேற்று வரை வாழ்ந்திருந்தேன்
இன்று உந்தன் திருமதியாய்
உனது நினைவில் வளறுகிரேன் ..
பூவில் விழும் பனிதுளியாய்
மனதில் உன்னை நான் சுமந்தேன்
நீ கொடுத்த கனவுகளை
எனது விழியில் வாதுகிரேன்...
உன் பார்வைகளில் உன் ஸ்பரிசங்களில்
நான் என்னை அறிந்தேன்
உன் பூவித்ழில் உன் புன்னகையில்
நான் இடரிவிழுந்தேன்.....
இனி உன்வாசம் என்னேடு என்வாசம் உன்னோடு...
தொகுத்திட தொலைதிட வானத்தில் பறந்த்ந்தேன்..........