Saturday, July 14, 2012

இன்னொரு காதல் கவிதை

உன் விழி ஈர பார்வையில்
நனைந்து போனது என் இதயம் ...

மழைக்கால மேகங்களாய்  எப்பொழுதும்
என்னுள் அலையும் உன் நினைவுகள் ...

நீ என்னை கடந்து போன
ஒவ்வொரு நொடியும்
நன் என்னை மறந்து போன 
தருணங்கள் ..

உனக்காக  காத்திருந்த தருணங்களில்
தவம் புரியாமலே நானும் முனிவநானேன்
யுகங்கள் கடந்ததால்

தீப்பெட்டி இல்லை தீக்குச்சி  இல்லை
உரசிக் கொண்டன உன் உதடுகள்
தீ பிடித்தது என் இதயம் ...