Sunday, January 25, 2009

தொலைந்து போனேன்

என் காதலி

உன்னில் என்னை
தேடித் தேடி
நான் தொலைந்து போனேனடி......

நீ விடும் சுவாசிக்கும்
காற்றில்
நான்
கரைந்து
போனேனடி...

தயவு செய்து
என்னை தேடி கொஞ்சம்
திருப்பி
கொடுடி...




Saturday, January 10, 2009

வழுக்கி விழுந்தேன்

நீ குளித்து விட்டு
வரும்பொழுது
ஒரு ஒற்றை நீர்த்துளி
உன் கை வழியே இடுப்பில்
விழும்போது வழுக்கி
விழுந்தது நீர்த்துளி மட்டுமல்ல்ல
நானும் தானடி


குடை கொடு

மழையில் நனையாமல்
இருக்க கொடுத்த பெண்ணே
உன்னால் நனையும்
என் மனசுக்கு
எப்படி குடை பிடிப்பாய்...

ஓரின சேர்க்கை

என்னவளே
உன் கூந்தலில்
மல்லிகை
பூ ஒன்று பூவோடு சேர்ந்தது
ஒ இதுதான் ஓரின சேர்க்கையா

நனைகிறேன்

மழையில்
நீ குடையுடன் நடக்கையில்
ஒரு மழைத்துளி உன்னில் பட்டு
நனைந்தது உன் சேலை மட்டுமல்ல
என் மனசும் தானடி

காகிதம் எதற்கு

கண்மணி

உன் இரு விழியில்

கவிதை எழுத

என் இதயம் இருக்க

காகிதம் எதற்கடி