Tuesday, May 26, 2009

தமிழன் என்று சொல்லடா

நாங்களும் இந்தியர்கள்தான் .....
நான் நன்றாக இருக்கிறேன்,
என்னகென்ன குறை ?!!!...
என் சகோதரர்கள் வெட்டப்படும்,
சகோதரிகள் கற்பழிக்கப்பட்டும்,
என் தமிழ்குழந்தைகள் தலையையும்
கைகளையும்கால்களையும் தொலைத்துவிட்டு
சிதறிகிடப்பதை கண்டும் கூட
செயலையோகுரலையோ உயர்த்தும்
என்உரிமைகள் பரிக்கப்படாலும் - நான்நன்றாகவே இருக்கிறேன்,
என்னகென்ன குறை ?
நரிகள் ஆண்டாலும், பாம்புகள் ஆண்டாலும்
நானும் என் பெற்றோரும்
இங்குபாதுகாப்பாகவே இருக்கிறோம்
பின்னே !!என் பாதுகாபிற்காக என்னை
இன்றுவரைசந்தித்திராத, என்னோடு பிறக்காத
என்சகோதரர்கள்தானே தன்னை
பலியிட்டுஎன்னை காத்து வருகிறார்கள் !!
வேறு எந்த நாடும் இலங்கையில் கால் வைக்ககூடாது
என்பதற்காக "சின்ன வீடு" இலங்கையை,
என் தேசம் வெட்கத்தை விட்டு
எப்போதும் "தாஜா"செய்யட்டும் - அதற்கு என் தமிழ் ரத்தம்தான் தரையெல்லாம்பாய வேண்டுமா ??...
நாம் எதற்கும் கவலைப்பட வேண்டாம் ...
தினமும் 1 மணிநேரம் கடற்கரையில் ஓடினால்100 வயது வரை வாழலாமாம் !!!...அவர்கள் ஒரு நாள்,
ஒரே ஒருநாள்சுதந்திரமாக வாழ்ந்துவிட வேண்டும் என்றுகழுத்தில் விஷத்தோடு கல்லிலும் முள்ளிலும்ஓடுகிறார்களே அதைபோல !!!!...
யார் சொன்னது என் கடமைகள்
எனக்கு தெரியாது என்று ??"தமிழே, தாயகமே" என்று யார் முழங்கினாலும் கொடிபிடிக்கிறேனேஅது என் ஜனநாயக கடமை இல்லையா ?
இரவு எத்தனை மணி ஆனாலும் IPL ஆட்டத்தை பார்த்துவிட்டுதான்மறுவேலை
இது என் தேசிய உணர்வு இல்லையா ??
திரையில் தோன்றும் கூத்தாடிகளுக்குமாலை மரியதையோடு பாலாபிஷேகம்செய்வோம் அது எங்கள்
பக்தி பரவச உணர்வு இல்லையா ??
அரைகுறை ஆடை 'நிர்வாண கூத்தாடிகளான'நடிகைகளுக்கு
நாங்கள் கட்டாத கோவில்களா ??
இதைவிட வேறு என்ன பொறுப்புகளை நாங்கள் செய்யவேண்டும்என்று நினைகிறீர்கள் ??
இதுகளும் இதுகளின் மன்றங்களும் என்தமிழனுக்கு செய்யாத தொண்டா ??? !!!
என்னிடம் 'டிக்கெட்' பிட்சைஎடுக்கும்
நடிகனையும்ஓட்டு பிட்சைஎடுக்கும்
தலைவரையும் நான்உயிரினும் மேலாக கருதுகிறேன்...
பின்னே !!என் இனம் தினம் தினம் சிதறி அழிவது கண்டுதாளமுடியாமல், உறங்கமுடியாமல் பலமாதங்களாக உயிர் வாழ்கிறார்கள் !!
உலகிலேயே கேட்பாரற்று மிக மிக மலிவாககிடைப்பது தமிழனின் உயிர்தான் ... !!!"முன் தோன்றிய மூத்தகுடிமகன்" என்று சொல்லிகொண்டாலும்நடத்தப்படுவது என்னவோ "மூத்தகுடி-மகன்" போலதான் ....
தமிழ் தூண்களின் திறமையும் திட்டமிடலும்
'மானாட மயிலாடவில்' தெரிகிறது ..
' ஸ்பெக்ட்ரத்தில்' கலர் கலராய் தெரிகிறதுதமிழனை காப்பாற்ற நாற்பதும் பேரும்என்னமாய் உழைக்கிறார்கள் !!...
முதலில் எல்லோருக்கும் டிவி தருவதுதான் நல்லது !!
அப்போதுதான் என் இனம், என் குழந்தைகள்
தினமும்ரத்தம் தெறித்து சாவதை பார்த்து ரசிக்கலாம் ...பங்குசந்தையையும்,அமெரிக்க பொருளாதாரத்தையும்,மென்பொருள் ஏற்ற இரக்கத்தையும்,IPL ஆட்டத்தையும்,அற்புத நடிகர்களையும்,
அரைநிர்வாண நடிகைகளையும் உற்று கவணிக்கலாம்
ஒரு காலத்தில் இவை மட்டும்தான் நம்மோடுஇருக்கும் - நம் இனம் இருக்காது ...
கொஞ்சமும் உணர்வில்லாமல் பதற்றப்படாமல்
எப்படி இதை நம்மால் பார்க்க முடிகிறது ...?
என் ஜனநாயக நாட்டில் இதற்காக
பேசத்தான் முடியாது,கோபப்படதான் கையாலாகாது.
வருத்தபடவோ அழவோ கூட இயலாதா ??
இயலாது இயலாது ..... மறத்தமிழன்...
வீரத்தை வெள்ளையனுக்கும் கற்றுதந்த தமிழன் எப்படி அழுவான் ??..
நம் தந்தையின் நெஞ்சில் குண்டுகள் பாயும்போதும் ,
தாயின் உடலில் தீ பரவும்போதும்,சகோதரனின் உறுப்புக்கள் வெட்டப்படும்போதும்,
தங்கைகள் கற்பழிக்கப்படும்போதும்,
குழந்தைகளை திசைக்கு ஒன்றாக
பிய்த்து எறியும்போதும்,
கொதிக்கும் 'தார்'ல் எறியும்போதும்
இப்படிதான் பார்த்துக்கொண்டு இருப்போமா ??
என்னையே நான் கேட்டுகொள்கிறேன்
"மானத்தமிழனே.. மானத்தமிழனே...
நீ இப்போது ஈனத்தமிழனே" என்று...
இலங்கை ராணுவத்தை நியாயப்படுத்தும்,
கணவான்களே,புத்தர்களே....
இந்திய தலைவர்களின் உயிர்தான் உயிர்
மற்றவன் உயிர் எல்லாம் மயிர்
என்று சொல்லும் மகாத்மாக்களே ..."தமிழன்" என்பதை மறந்துவிட்டு "மனிதன்" என்றகுறைந்தபட்ச தகுதியையாவது
தந்துநெஞ்சில் "கை" வைத்து
சொல்லுங்கள்அங்கே நடப்பதெல்லாம் சரிதானா ???"சரி" என்று நீங்கள் சொன்னால் உங்கள்
ரத்தத்தை பரிசோதித்து கொள்ளுங்கள்
அது ரத்தமாக இல்லாமல் இருக்ககூடும் !!!
"என்னை கடலிலே தூக்கி போட்டாலும்
கட்டுமரமாக தமிழர்களை காப்பேன் "ஆகா!!
என்ன அற்புதம் !!மீன் பிடிக்கசென்று குண்டடிபட்டு கடல்நீரில் துடிதுடித்து இறந்து 'கட்டைமரமாய்'தினம் தினம் மிதக்கும் தமிழர்களில் இந்த'கட்டுமரம்' எத்தனைபேரை காப்பாற்றிஇருக்கிறது தெரியுமா ??
"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா" என்பது
எனக்கு மட்டும்தானா ??
அவர்கள் பேசுவது தமிழ் என்றால்
அவர்களும் தமிழர்கள்தானே ??அவர்கள் மட்டும்"
தமிழன் என்று சொல்லடா
தன்மானம் இழந்து சாவடா"
என்று சொல்லி பரதேசியாய்........

No comments: