Thursday, July 24, 2008

எங்கே போகிறோம்

பூமியில் பிறந்தோம்
பூக்களாய் மலர்ந்தோம்
பறவைகளாய் பாடித் திரிந்தோம்
இயற்கை உணவு கொடுத்தது
சுதந்திரமாய் வாழ்ந்தோம்

நாகரீகம் பிறந்தது
மனித வாழ்வும் குலைந்தது

பணம் என்ற அரக்கன் பிறந்தான்
மனிதன் நிம்மதி போனது


Tuesday, July 22, 2008

யார் வானத்தில்

யார் அங்கே
வானத்தில் சோப்பு போட்டு
துணி துவைப்பது

நுரைகளாய் மேகங்கள்

சீதை

சிதையிலே நடந்து
கற்பு காட்டினாள் சீதை அன்று

சீதையே சிதையாகிப் போனாள் இன்று .

Friday, July 18, 2008

எங்கே சென்றதடி நம் காதல்

என்னவளே
கல்லூரியில் படிக்கும் போது
நீயே என் வேதம் என்றாய்
நீயே என் வானம் என்றாய்
நீயே என் வாழ்க்கை என்றாய்
எல்லாம் கல்லூரி வரைதான்
இதோ
கையில் ஒரு குழந்தையுடன்
கணவனுடன் செல்கிறாய்
எங்கே சென்றதடி உன் புன்னகை
என்னை ஏன் குற்றவாளி போல் பார்க்கிறாய்

கொஞ்ச kaalam
unnai என் idaya சிறையில்
vaiththirunthen enpahtalaa
paravaayillai
நீ என்னை manalil kolamittai

nano manathil kolamitten.














கடந்த காலம்

என் கல்லூரி தோழியே

நாம் அன்று முதல் முதலில்
சந்தித்த அந்த வேப்ப மரங்கள்
நம் பேசி சிரித்ததை மறைத்திருந்து
பதிவு செய்த காற்று
நம் காலடி பதிந்த அந்த
சாலையோரம்கள்
எல்லாம் இன்னும்
அப்படியே இருக்கும் பொது
எப்படி அது
கடந்த காலமாகும்.



















உன் பார்வை

ஒரு கோடி சூரியன் என்றாலும்
ஒரு பனித் துளிக்குள் அடக்கமே

கோடி இன்பம் என்றாலும்
உன்
ஒரு விழி பார்வையில் அடக்கமே

சுமைகள்

சுமந்து சுமந்து வலிக்குதென்று
சுமைகளை கீழே போட்டு
சுமந்தவன் உட்கார
சும்ந்தவனே சுமைக்கு
சுமையான விந்தையென்ன .

இதுதானா காதல்

ஏதும் இடம் மாறவில்லை
ஆனால் எல்லாம் மாறித் தெரிகிறதே
இதுதான் காதலா

என் காதல்

என் காதலியே
நீர் நெருப்புக்குள் செல்லலாம்
ஆனால் நெருப்பு நீருக்குள் செல்ல முடியுமா
அது போல்தனடி என் காதலும்
நீ என்னை மறக்கலாம்
ஆனால் நான்
உன்னை மறக்க முடியுமா

காதல்

மண்ணுக்குள் விழுந்த உடன்
முளைக்குமா விதை
கண்ணுக்குள் உன் பிம்பம் விழுந்த உடன்
காதல் மட்டும் முளைத்தது எப்படி?

பூமி அதிர்ந்தால் பூகம்பம் என்பர்
உன் காலடி ஓசை கேட்டு
என் இதயம் அதிர்ந்தால் என்ன பெயர் ?




தமிழ் வாழ்க

என் இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம.