தனிமை வெயிலில் வறண்டு போன
பாலை வனமாய் வாழ்கை
ஒவ்வொரு மழைத்துளி வரவைப் பார்த்து
வானம் பார்த்து காத்திருக்கும் பூமியாய் மனசு
ஒவ்வொரு முறை குளிர் காற்று
கடக்கும் போதும் மழையை எதிர்நோக்கும்
ஈரம் பட்ட மனது
சில நேரங்களில் சிறு மழை பெய்தாலும்
பற்றுதல் இல்லாமலோ இல்லை பற்றி
கொள்ள முடியலோ கடந்து சென்றது
மழை நீர் ...
வெப்பத்தில் ஆவியாகி காணாமல் போகாமல்
அவ்வப்போது சிறு அன்பு மழையில்
நனைத்து குளிர்விக்கும் தோழிகள்
மேகம் மழை மூலம் பூமியை குளிர்வித்தாலும்
பூமியோடு எப்போதும் சொந்தம் கொண்டாட
முடிந்ததில்லை .
அன்பு கொண்ட நெஞ்சங்களும் அப்படியே ..
மேகம் மேலே இருக்கும் வரைதான்
பூமிக்கு மழை கொடுக்க முடியும் ..
மழை நீர் பெற்ற பூமி மலர்களை
வான் நோக்கி வளர்த்து நன்றி சொல்கிறது
மரங்களின் மூலம் தன் கை அசைத்து
அன்பை சொல்கிறதே
அது போலவே நானும் ...
எப்போதும் என் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் ..
நன்றியுடையவனாய் .................
1 comment:
You are welcome.
Post a Comment