Thursday, October 25, 2012

மழையும் என் தோழர்களும் தோழிகளும்

தனிமை வெயிலில் வறண்டு போன 
பாலை வனமாய் வாழ்கை 

ஒவ்வொரு மழைத்துளி வரவைப் பார்த்து 
வானம் பார்த்து   காத்திருக்கும் பூமியாய் மனசு 

ஒவ்வொரு முறை  குளிர் காற்று 
கடக்கும் போதும் மழையை  எதிர்நோக்கும் 
ஈரம் பட்ட மனது 

சில நேரங்களில் சிறு மழை பெய்தாலும் 
பற்றுதல் இல்லாமலோ இல்லை பற்றி 
கொள்ள முடியலோ  கடந்து சென்றது 
மழை நீர் ...

வெப்பத்தில் ஆவியாகி காணாமல் போகாமல் 
அவ்வப்போது சிறு   அன்பு  மழையில் 
நனைத்து குளிர்விக்கும்  தோழிகள் 


மேகம் மழை மூலம் பூமியை குளிர்வித்தாலும் 
பூமியோடு எப்போதும் சொந்தம் கொண்டாட 
முடிந்ததில்லை .

அன்பு கொண்ட நெஞ்சங்களும் அப்படியே ..

மேகம் மேலே இருக்கும் வரைதான் 
பூமிக்கு மழை கொடுக்க முடியும் ..

மழை நீர்  பெற்ற  பூமி  மலர்களை 
வான் நோக்கி வளர்த்து நன்றி சொல்கிறது 

மரங்களின் மூலம்  தன் கை அசைத்து 
அன்பை சொல்கிறதே 

அது போலவே நானும் ...

எப்போதும் என்  தோழர்களுக்கும் தோழிகளுக்கும் ..
நன்றியுடையவனாய் .................