Monday, August 1, 2011

நட்பு

உயிர் என்பது மூன்றேழுத்து
உறவு என்பது மூன்றேழுத்து
நட்பு என்பதும் மூன்றேழுத்து -ஆம்
உயிரோடு கலந்த உறவே நட்பு----

உறவுகள் என்பது உடல் உள்ள வரை
காதல் என்பது காமம் உள்ள வரை
நட்பு மட்டுமே உயிரின்
கடைசி சொட்டு உள்ள வரை---

உறவுகள் என்பது உயிர்மெய் எழுத்து
நட்பு என்பது உயிரெழுத்து -அது
மெய்யோடு சேராவிடினும் எப்போதும்
மெய்க்கு உயிர் கொடுத்து கொண்டிருக்கும் ....

உறவுகள் சில நேரம்
உறங்கி எழுந்த உடன்
கலைந்து செல்லும் கனவுகள் போன்றது
நட்பு என்பது உறங்கி எழுந்த பின்னும்
நீண்டு இருக்கும் நினைவுகள் ....

நட்பு சில நேரங்களில்
உணர முடியாமல் இருக்கலாம்-ஆனால்
நமக்கு தெரியாமலே நமக்குள்
உயிர் காற்றாய் போய் கொண்டிருக்கும்...

உறவுகள் மறந்து போகலாம்
காதல்கள் கசந்து போகலாம்
நட்பு மட்டுமே கல்லறை வரை ...

எந்த உறவும் நட்பாகி விடாது
நட்பு மட்டுமே எல்லாமும் ஆகும்....

எல்லா உறவுகளும் காலத்திற்கு கட்டுப் பட்டது
நட்பு மட்டுமே காலத்தை கட்டு படுத்துவது..

எந்த உறவுக்கும் வயதாகிப் போகலாம்
நட்பு மட்டும் என்றும் இளமையாய்...










1 comment:

Bhushavali said...

//எந்த உறவும் நட்பாகி விடாது
நட்பு மட்டுமே எல்லாமும் ஆகும்....//
So true.... Beautiful words...
You've got a great blog here.

Thanks for dropping by my blog..
Great to know you're from Paramathi Velur.
Do visit Paramathi and do visit the temple sometime...
The river behind the temple is such a peaceful place to spend a few hours...
Thanks again for dropping by my blog. Do drop by often.
I'd love your visits & comments...
My Travelogue - Paramathi Velur