Sunday, November 30, 2008

இன்று

தேச பாதுகாப்புக்காக கொண்டு வந்த பொடா சட்டத்தை சொந்த விருப்பு வெறுப்புக்காக பயன்படுத்திய ஜெயலலிதா ஒருபுறம் தேசிய பாதுகாப்பு சட்டத்தை நேற்று கேலி கூத்தாக்கிய கருணாநிதி ஒருபுறம் ஒரு மத்திய அமைச்சர் மகளை விடுவிக்க பத்து தீவிரவாதிகளை விடுவித்த காங்கிரஸ் கட்சியினரின் தேச பற்று ஒருபுறம் இந்திய கடல் எல்லையை பாதுகாக்காமல் சோமாலிய கடல் கொள்ளையரை பிடிக்க கடற்படையை அனுப்பும் மத்திய அரசு ஒருபுறம் ஐந்து கோடி லஞ்சம் தந்து திகார் சிறையில் இருந்து பீகார் சிறைக்கு மாறி உல்லாசம் அனுபவிக்கும் பப்பு யாதவை தேர்ந்தெடுக்கும் நமது கேடுகெட்ட அரசியல் சாசனம் மறுபுறம் ஒவ்வொரு நாளும் நமது நாட்டை உயர்வாக பேசி பேசி இன்று பிற நாட்டவரின் துக்க விசாரிப்பிற்கும் ஏளன பார்வைக்கும் ஆளாகி நிற்கும் நம் நிலையை கண்டால் நின்று விடவா என இதயம் கேட்கிறது. கண்களில் நீர் துளிர்கிறது. என் இதயம் நிறைந்த இந்தியா இன்று எங்கே செல்கிறது?