Tuesday, August 12, 2008

அம்மா

வேலை தேடி பஸ் ஏறிய பொழுது
சீக்கிரம் வேலை தேடு
அப்பதான் நம் கடனை அடைக்க முடியும்-அப்பா

சீக்கிரம் வேலை தேடு அப்பதான்
என் கல்யாணம் நடக்கும் -தங்கை

சீக்கிரம் வேலை தேடு -எங்களுக்கும்
எதாவது வேலை இருந்தா சொல்லு -நண்பர்கள்

சீக்கிரம் வேலை தேடு அப்பதான் நம்
கல்யாணம் நடக்கும் -காதலி

பார்த்து போ வேளா வேளைக்கு சாப்பிடு
சனி கிழமை ஆனா என்னை தேய்த்து குளி-அம்மா
இன்று அம்மா சாப்பிடவும் சனிக்கிழமை என்னை தேய்க்கவும்
மறந்து போனது .ஆனால்
அம்மா சொன்ன வார்த்தைகள் மட்டும்
மறக்காமல் இன்னும் நெஞ்சுக்குள் ஈரமாய்
அம்மா என்ன செய்து உன் கடனை அடைப்பேன்.


























எப்படி கொடுப்பேன்

என் காதலி ,

நீ கொடுத்த பரிசுகளை கேட்டாய்
கொடுத்து விட்டேன்
நீ கொடுத்த கடிதங்களை கேட்டாய்
கொடுத்து விட்டேன்
உன் நினைவாய் என்னிடம் இருந்த
உன் படங்களை கேட்டாய்
கொடுத்து விட்டேன்
ஆனால்
நீ என்னை கட்டியணைத்த போது
உண்டான வெப்பத்தை எப்படியடி
திருப்பி கொடுப்பேன்
ஒவ்வொரு முறையும் உன் காலடி
ஓசை கேட்டு கனத்து போன
இதயத்தின் உணர்வுகளை எப்படி கொடுப்பேன்










Thursday, July 24, 2008

எங்கே போகிறோம்

பூமியில் பிறந்தோம்
பூக்களாய் மலர்ந்தோம்
பறவைகளாய் பாடித் திரிந்தோம்
இயற்கை உணவு கொடுத்தது
சுதந்திரமாய் வாழ்ந்தோம்

நாகரீகம் பிறந்தது
மனித வாழ்வும் குலைந்தது

பணம் என்ற அரக்கன் பிறந்தான்
மனிதன் நிம்மதி போனது


Tuesday, July 22, 2008

யார் வானத்தில்

யார் அங்கே
வானத்தில் சோப்பு போட்டு
துணி துவைப்பது

நுரைகளாய் மேகங்கள்

சீதை

சிதையிலே நடந்து
கற்பு காட்டினாள் சீதை அன்று

சீதையே சிதையாகிப் போனாள் இன்று .

Friday, July 18, 2008

எங்கே சென்றதடி நம் காதல்

என்னவளே
கல்லூரியில் படிக்கும் போது
நீயே என் வேதம் என்றாய்
நீயே என் வானம் என்றாய்
நீயே என் வாழ்க்கை என்றாய்
எல்லாம் கல்லூரி வரைதான்
இதோ
கையில் ஒரு குழந்தையுடன்
கணவனுடன் செல்கிறாய்
எங்கே சென்றதடி உன் புன்னகை
என்னை ஏன் குற்றவாளி போல் பார்க்கிறாய்

கொஞ்ச kaalam
unnai என் idaya சிறையில்
vaiththirunthen enpahtalaa
paravaayillai
நீ என்னை manalil kolamittai

nano manathil kolamitten.