Saturday, July 14, 2012

இன்னொரு காதல் கவிதை

உன் விழி ஈர பார்வையில்
நனைந்து போனது என் இதயம் ...

மழைக்கால மேகங்களாய்  எப்பொழுதும்
என்னுள் அலையும் உன் நினைவுகள் ...

நீ என்னை கடந்து போன
ஒவ்வொரு நொடியும்
நன் என்னை மறந்து போன 
தருணங்கள் ..

உனக்காக  காத்திருந்த தருணங்களில்
தவம் புரியாமலே நானும் முனிவநானேன்
யுகங்கள் கடந்ததால்

தீப்பெட்டி இல்லை தீக்குச்சி  இல்லை
உரசிக் கொண்டன உன் உதடுகள்
தீ பிடித்தது என் இதயம் ...






Tuesday, May 8, 2012

இன்று  காலை  ஒரு அழகான  பாடலை  கேட்கும்  வாய்ப்பு  கிடைத்தது .

கேட்கும் போதும் வரிகளை படிக்கும் போதும் இதமாக  இருந்தது 

இதோ  அந்த வரிகள் ..


உன்னை சரணடைந்தேன் மன்னவா மன்னவா
இன்னும் ஒரு தேவை சொல்லவா சொல்லவா
இந்த அழகிய நிமிசம் இது வளர்ந்திட வேண்டும்
இது முடிகிர நேரம் உயிர் விட வேண்டும்
உடலும் மனமும் உனையே தொடர............வா

காற்று வெளி மின்மினியாய்
கண்கள் வளி நீ வந்தாய்
நானேழுதும் மேஜையிலே
எரியும் விளக்கய் ஒளிருகிராய்
எனது விரல் நீ பிடித்து
உயிரெழுத்தை எழுதுகிராய்
துணையெழுத்து நீயாக
உரவின் உலகை உயர்த்துகிராய்..
உன் வெள்ளை மனம் பொன் மஞ்ஜ்சள் நிறம்
நான் என்னை மறந்தேன்
நான் செய்த தவம் நீ
பெற்ற வரம் நான் உன்னை அடைந்தேன்
அந்த சங்கித சந்திப்பில் சந்தோச தித்திப்பில்
மழை துளியென மடியினில் விழுந்தேன்...
(உன்னை )

சேர்த்து வெளி வான்மதியாய்
நேற்று வரை வாழ்ந்திருந்தேன்
இன்று உந்தன் திருமதியாய்
உனது நினைவில் வளறுகிரேன் ..
பூவில் விழும் பனிதுளியாய்
மனதில் உன்னை நான் சுமந்தேன்
நீ கொடுத்த கனவுகளை
எனது விழியில் வாதுகிரேன்...
உன் பார்வைகளில் உன் ஸ்பரிசங்களில்
நான் என்னை அறிந்தேன்
உன் பூவித்ழில் உன் புன்னகையில்
நான் இடரிவிழுந்தேன்.....
இனி உன்வாசம் என்னேடு என்வாசம் உன்னோடு...
தொகுத்திட தொலைதிட வானத்தில் பறந்த்ந்தேன்..........

Sunday, October 23, 2011

என் கண்மணி

கண்மணி

நம் காதல் கல்லறையில் முடியலாம்
ஆனால் அதில் முளைக்கும்
ஒற்றை ரோஜா நம் காதலை
உலகுக்கு சொல்லும் ..

கண்மணி

என் கனவுகள் விற்பனைக்கு அல்ல
ஏனெனில் அதில் - உன்
நினைவுகளும் கலந்திருப்பதால் ..

கண்மணி
காதல் கருவை சுமந்து சுமந்து
நானும் தாய் அனேனடி..

விடிகாலை   பொழுதுகளிலும்
வெளிச்சமில்லா இரவுகளிலும்
உன் நினைவுகளால் சிரித்திருக்கிறேன்
அழுதிருக்கிறேன்.உறக்கம் வராமல் 
புரண்டு புரண்டு படுத்திருக்கிறேன் 
கண்மணி எனக்கும் கொஞ்சம் 
வைத்தியம் பாரடி ..


ஒவ்வொரு குளிர்கால இரவும் 
நாம் சேர்ந்திருந்த காலத்தை
நினைவு படுத்தி தேகம் தகிக்குதடி

ஒவ்வொரு வெயில் கால இரவும் 
நாம் பிரிந்திருந்த காலம் 
நினைவில் வந்து வேதனையை 
தூண்டுதடி .என்ன செய்வேன் நான் .

ஒவ்வொரு முறையும் உன்னை 
மறக்க நினைத்து நினைத்து 
முடியாமலே தவிக்கிறேனடி 

விளக்கென்று தெரியாமல் 
உன்னை சுற்றி சுற்றி வந்த 
விட்டில் பூச்சி ஆனேன் . 

முகம் பாராமலே உன் 
முகவரி கொடுத்தாய்
என் முகவரி நீயென்று ஆன போது
ஏனடி சொல்லாமல் ஓடி விட்டாய்

எத்தனையோ இரவுகள் உன்னை நினைத்து
என் இதயம்
அழுதிருக்கிறது -- கண்மணி
ஒரு பகலேனும் எனக்காக நீ
சிரித்திருந்தால் என்ன..

தினமும் என்னோடு உன் கனவுகளில்
குடும்பம் நடத்தினாயே
ஒரு முறையேனும் நிஜத்தை
சொல்லியிருந்தால் என்ன ?
என்றும் உன் நிழலாய்
இருந்திருப்பேனே ......




Monday, August 1, 2011

நட்பு

உயிர் என்பது மூன்றேழுத்து
உறவு என்பது மூன்றேழுத்து
நட்பு என்பதும் மூன்றேழுத்து -ஆம்
உயிரோடு கலந்த உறவே நட்பு----

உறவுகள் என்பது உடல் உள்ள வரை
காதல் என்பது காமம் உள்ள வரை
நட்பு மட்டுமே உயிரின்
கடைசி சொட்டு உள்ள வரை---

உறவுகள் என்பது உயிர்மெய் எழுத்து
நட்பு என்பது உயிரெழுத்து -அது
மெய்யோடு சேராவிடினும் எப்போதும்
மெய்க்கு உயிர் கொடுத்து கொண்டிருக்கும் ....

உறவுகள் சில நேரம்
உறங்கி எழுந்த உடன்
கலைந்து செல்லும் கனவுகள் போன்றது
நட்பு என்பது உறங்கி எழுந்த பின்னும்
நீண்டு இருக்கும் நினைவுகள் ....

நட்பு சில நேரங்களில்
உணர முடியாமல் இருக்கலாம்-ஆனால்
நமக்கு தெரியாமலே நமக்குள்
உயிர் காற்றாய் போய் கொண்டிருக்கும்...

உறவுகள் மறந்து போகலாம்
காதல்கள் கசந்து போகலாம்
நட்பு மட்டுமே கல்லறை வரை ...

எந்த உறவும் நட்பாகி விடாது
நட்பு மட்டுமே எல்லாமும் ஆகும்....

எல்லா உறவுகளும் காலத்திற்கு கட்டுப் பட்டது
நட்பு மட்டுமே காலத்தை கட்டு படுத்துவது..

எந்த உறவுக்கும் வயதாகிப் போகலாம்
நட்பு மட்டும் என்றும் இளமையாய்...










Monday, February 28, 2011

வெட்கமில்லை

ஏனடி
உனக்குதான் வெட்கமில்லை என்று நினைத்திருந்தேன்
உன் கண்களுக்கு கூடவா
என்னை பார்த்த உடன்
இமை என்ற ஆடை திறந்து என்னை பார்கிறதே..


  


Saturday, March 20, 2010

இயற்க்கை

அதிகாலை குயிலின் பூபாளம் கேட்டு
விழித்தெழுந்தான் சூரியன் ..

காலச் செடியில் ஓர் புது மலர் விடியல் .
வெண்பட்டுப் போர்வையில் புற்களின் மேல்

ஓராயிரம் பனித்துளி பாயிரம் பாட
ஒவ்வொரு துளியிலும் ஒரு சூரியன் நாட்டியமாட.....

ஓயாது மலையை  குளிப்பாட்டும்   அருவி
பகலில் கதிரவனை காண
வெட்கப் பட்டு இரவில் மேகத்தில்
ஒளிந்து வரும் நிலவுக் காதலி ....

தூரங்கள் ஆயிரம் இருந்தாலும்
மழைத்துளி மூலம் பூமியை
நலம் விசாரிக்கும் வானம் ..

ஆயிரம் முறை தொட்டாலும்
மீண்டும் தொட தீராத காதலுடன்
அலைகடல்..

அந்தி மாலைப் பொழுதில்
தென்றல் புதியதொரு ராகம் பாட
தலையாட்டி ரசிக்கும் நெல் வயல்கள் ....

ஆற்று நீரில் ஆயிரம் சூரியன்
வெள்ளி மீன்கள் துள்ளி குதிக்க
திருவிழா கண்டது மனசு....

தொலைந்து போனது தெரியாமல்
தொலைந்த இடம் புரியாமல்
தொடர்ந்து முகவரி தேடி
காற்று வெளியில் அலையும் மேகங்கள் ....

ஒவ்வொரு மரமாய் நலம் விசாரிக்கும் காற்று
அசைந்தது மரமா இல்லை காற்றா?....

பூமிக்கு குடை பிடிக்கும் மரங்களுக்கு
மட்டும் குளிரே எடுப்பதில்லையோ...

ஆயிரம் ஆயிரம் பூக்கள்
ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு  வாசம்...

எத்தனை பூக்கள் மலர்ந்தாலும்
எந்தனை பூக்கள் மறைந்தாலும் ....

பூக்களின் வாசம் குறைய வில்லை
மனிதனின் நேசமும் மாறவில்லை
ஒற்றை காலில் தாமரையின் தவம்
யாருக்காக?.....

ஓயாது சூரிய காதலனை
நினைத்து கனவு காணும் அல்லி....

தான் உடுத்தியது பட்டென்று
தெரியாமல்
பறக்கும் வண்ணத்து பூச்சி....

ஆயிரம் காற்றாடி இருக்கலாம்
தொட்டு தழுவி மென்மையாய்
சுகம் தரும் தென்றல் போல் வருமா...

வெண் பட்டுப் பனித்துளி
பச்சை மரகத மரங்கள்
சிவப்பு செவ்விதழ் கோவை
அந்தி மஞ்சள் வானம்......

கருப்பு கூந்தல் மேகம்
கூந்தலில் ஆயிரம் விண்மீன்  மலர்கள்....

வாழ்கையை ரசிப்பவன் மனிதன்
இயற்கையை ரசிப்பவன் கவிஞன்..

Monday, October 26, 2009

வெட்கம்

பெண்ணே
எத்தனையோ பெண்களின் வெட்கத்தை
என் பேனா கவிதை ஆக்கியிருக்கிறது .
ஆனால் உனக்கு கவிதை எழுதும் போது மட்டும்
என் பேனவுக்கேவெட்கம் வந்தது .